கோயிலுக்குள்ளேயே 2 பேர் செய்த அதிர்ச்சி காரியம்.. மிரண்டு போன கடலூர்.. வைரல் வீடியோ!
விருதாச்சலம் கோயில் சர்ச்சை தொடர்பாக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
கடலூர்: கோயிலுக்கு உள்ளேயே 2 பேர் செய்த காரியத்தை பார்த்து கடலூர் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.. இது சம்பந்தமான வீடியோவும் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ளது மணவாளநல்லுார் என்ற பகுதி.. இங்கு கொளஞ்சியப்பர் என்ற கோயில் உள்ளது.. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது... இந்த கோயிலுக்குள்ளேயே நந்தவனம் போன்ற பகுதியும் இருக்கிறது.
இந்த சுற்றுவட்டார பகுதியில் இது ரொம்பவும் ஃபேமஸ் ஆனது.. ஆனால் தற்போது லாக்டவுன் என்பதால், பக்தர்கள் யாரும் சரியாக வருவதில்லை.. ஆனால், வழக்கமான பூஜைகள், துப்புரவு பணிகளை மட்டும் மேற்கொள்ள அறநிலையத்துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு மேனேஜர் ஒருவர் இருக்கிறார்.. அதாவது பொறுப்பு மேலாளர்.. பெயர் சிவராஜன்.. இவரும் செக்யூரிட்டி சிவக்குமார் என்பவரும் சேர்ந்து கோயிலில் உள்ள நந்தவனத்தில் தண்ணி அடித்துள்ளனர்.. சிக்கன், மட்டன் என வாங்கி வெளுத்து கட்டுகிறார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பகீரை கிளப்பியது.
தைல மரக்காட்டில் உடம்பு.. தண்டவாளத்தில் தலை.. விடிகாலையில் நடந்த பயங்கரம்.. பழிக்குபழி.. சென்னை ஷாக்
இவர்கள் மட்டுமில்லை... இதே இடத்தில் நிறைய பேர்தண்ணி அடிக்கிறார்களாம்.. சிகரெட் பிடிக்கிறார்களாம்.. அந்த வீடியோவும் வெளியாகி உள்ளது... எத்தனையோ பண்டிகைகள், நல்ல நாள்களில் கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் கோயிலுக்குள்ளேயே உட்கார்ந்து இப்படி தண்ணி அடித்து கூத்தடிப்பதை கண்டபக்தர்கள் ஷாக் ஆனார்கள்.. இந்த சமயத்தில்தான், பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.