கடலூரில் திடீரென இடிந்து விழுந்த வீடு.. ஒரு வயது பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் சாவு
Recommended Video
கடலூர்: கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மூன்று பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் திருப்பாதிபுலியூர், கம்மியம்பேட்டை பகுதி சுசிலா நகர் ரயிஸ்மில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் அங்கு தனது மனைவி மாலா மற்றும் மருமகள் மகேஷ்வரி பேத்தி தனஶ்ரீ, யுவஶ்ரீ, உட்பட 6 பேர் சிமென்ட் ஷீட் பொருத்திய ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையில் சுவர் ஊறி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ மற்றும் மாலா, மகேஷ்வரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
நாராயணன், ரஞ்சிதா உள்ளிட்ட மற்றவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் இடிந்து விழுந்து கிடந்த சுவற்றை அப்புறப்படுத்தி சுவற்றின் அடியிலிருந்த நாராயணன், ரஞ்சிதா யுவஸ்ரீ ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மாலா மகேஸ்வரி தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் நல்லுறவில் நடைபெற்ற இந்த கோரச் சம்பவம் கமிட்டி பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது