என்ன கனவில் இருந்தார்களோ.. கடலூர் சில்வர் பீச்சில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ஒரு மாணவன் மாயம்
Recommended Video
கடலூர்: கடலூரில் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சந்தோஷத்தை கொண்டாட கடலூரில் உள்ள சி.கே. என்ற தனியார் பள்ளியில் பயாலஜி படித்து வரும் மாணவர்கள் 9 பேர் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளனர்.
குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!
அலையில் சிக்கிய மாணவர்கள்
அதில் 5 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி தவித்துள்ளனர். இதை பார்த்த கடலில் குளித்துக் கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்கள் அலையில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
மேலும் ஒரு மாணவர் பலி
5 பேரில் தனீஷ்வர், விக்னேஷ் என்ற இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீஹரி என்ற மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
தேடல்
அபினேஷ் எனும் மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பரணி என்ற மாணவனை காணவில்லை. அவரை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
அழுகை
பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்ற கனவுடன் இந்த மாணவர்கள் இருந்தனரோ தெரியவில்லை. தேர்வு முடிந்ததை கொண்டாட வந்துவிட்டு இதுபோல் நடந்துவிட்டதே என மற்ற மாணவர்கள் கதறி அழுதனர்.