கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. 7 பேர் காயம்

Google Oneindia Tamil News

நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சியில் 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியிலிருந்த 7 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழலும் போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

7 injured in Boiler blast in Neyveli thermal power plant

இந்த நிலையில் இங்கு 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் கரும்புகை எழுந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அந்த 7 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. லாக்டவுனால் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லாத நிலையில் இன்று உற்பத்தியை தொடங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

7 injured in Boiler blast in Neyveli thermal power plant

போபால் தொடங்கி விசாகப்பட்டினம் வரை இந்தியாவை உலுக்கிய 6 விஷவாயு தாக்குதல் துயரங்கள்போபால் தொடங்கி விசாகப்பட்டினம் வரை இந்தியாவை உலுக்கிய 6 விஷவாயு தாக்குதல் துயரங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 13 பேர் பலியான நிலையில் இன்று நெய்வேலியில் விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Boiler blast in Neyveli Thermal power station leads to 7 persons got injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X