கடலூரில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பின் 70 பேர் சிறையில் அடைப்பு
Recommended Video
ஜாக்டோ ஜியோ அமைப்பின் 70 பேர் சிறையில் அடைப்பு- வீடியோ
கடலூர்: கடலூரில் மறியலில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினரில் 70 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூரில் நேற்று மறியலில் ஈடுபட்டு 1000த்திற்க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று இரவு கடலூர் துறைமுகத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டிருந்தவர்களில் 70 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது, பணிக்கு செல்பவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு முன் 70 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் 70 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Comments
English summary
70 Jacto Geo employees jailed in Cuddalore for protesting in road.