சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியா?... திருமாவளவன் விளக்கம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தான், மீண்டும் போட்டியிடுவது குறித்து, வரும் 4-ம் தேதி முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜாநந்தாவின் 129-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற திருமாவளவன், சகஜாநந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.
ரஜினி கட்சி, இப்போதைக்கு இல்லையாம்.. தேர்தல் நெருங்கும்போது வாய்ஸ் மட்டும் வரலாமாம்!
முன்னதாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.