தூக்கில் தொங்கிய பிரியங்கா.. கீழே குழந்தையின் சடலம்.. கொலையா தற்கொலையா.. கலங்கி போன கடலூர்!
கடலூர் அருகே தாயும், குழந்தையும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்
கடலூர்: பிரியங்கா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அவரது குழந்தை அவருக்கு கீழே சடலமாக கிடந்தது.. தாயும் - குழந்தையும் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை.. இது கொலையா? தற்கொலையா என்றும் தெரியவில்லை.. கடலூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன்.. இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
ஆட்கொண்ட நத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. பிறகு 2 வருஷத்துக்கு முன்பு அவரையே கல்யாணமும் செய்தார்.. ஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.
அந்த குழந்தையின் பிறந்த நாள் தற்போது சிறப்பாக கொண்டாடவும் தம்பதியினர் பிளான் செய்து வந்தனர்.. இந்நிலையில், தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர்.. இவர்கள் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை.
பிரியங்கா தூக்கில் தொங்கி கொண்டு இருந்திருக்கிறார்.. குழந்தை மீனலோச்சினி கீழே இறந்த நிலையில் கிடந்தாள்.. இப்படித்தான் இவர்களை சடலமாக அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.
தயங்காதீங்க.. "போலீஸ் உங்க நண்பன்தான்" தைரியமா புகார் கொடுங்க.. தெறிக்கவிட்ட திருச்சி டிஐஜி ஆனிவிஜயா
அவர்கள் விரைந்து வந்து தாய் - மகள் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. உண்மையிலேயே இந்த சம்பவம் போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா என தெரியவில்லை.
பர்த்டே கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் பிரியங்கா ஆர்வமாக செய்து வந்த நிலையில்,இந்த மர்ம மரணம் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.. எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும்.. போலீசாரும் விசாரணையை கிண்டி எடுத்து வருகின்றனர்.