கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்த ஜோதிடர்.. நாடகமாடிய கள்ளக்காதலி!
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனதாக அவருடன் வாழும் மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொன்று புதைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரவோடு இரவாக கண்ணதாசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக ஜோதிடர் கோபிநாத், கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்... பிரியாணி விருந்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!
ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீசாரின் விசாரணைக்கு பிறகு கண்ணதாசன் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.