இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்!
டிக்டாக் ராஜேஸ்வரி கொலை வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது
கடலூர்: ராஜேஸ்வரியின் 300 டிக்டாக் வீடியோவில் பெரும்பாலும் எல்லாமே லவ் வீடியோதானாம்.. இதில் ஒரு வீடியோவில் சில இளைஞர்கள் ராஜேஸ்வரியை இழுத்து படுக்கையில் போட்டு அமுக்குவது போன்றும் உள்ளதாம்.. அது இறந்துபோன ராஜேஸ்வரிதான் என்றும் கமெண்ட்கள் வருகின்றனவாம்... எனவே ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
எத்தனையோ குடும்பங்கள் டிக்டாக்கினால் சீரழிந்து வருகின்றன.. அதில் ஒன்றுதான் ராஜேஸ்வரியின் குடும்பமும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்த தம்பதி குமரவேல் - ராஜேஸ்வரி... ராஜேஸ்வரிக்கு வயது 25.. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குமரவேல் கார் டிரைவராக உள்ளார்.
ராஜேஸ்வரி
எந்நேரமும் டிக்டாக் வீடியோவில்தான் ராஜேஸ்வரி மூழ்கி இருந்துள்ளார்.. ஆடி, பாடி டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டுள்ளர்.. இது கடைசியில் ஏகப்பட்ட ஆண் நண்பர்களின் பழக்கத்தை தந்து... அரசியல் பிரமுகர்வரை உறவு நீண்டு கொண்டே போனது. சொல்லி சொல்லி பார்த்த கணவன், கடைசியில் ஆட்டுக்கல்லை தூக்கி போட்டு ராஜேஸ்வரியை கொன்றேவிட்டார்.
டிக்டாக் மோகம்
இப்போது குமரவேல் சிறைக்கு செல்ல.. அந்த 2 குழந்தைகள் அனாதையாகி நிற்கின்றனர்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த டிக்டாக் மோகம்தான்! எத்தனையோ பேர் திறமைகளை வெளிப்படுத்தி இதே டிக்டாக்கை நல்ல வழியிலும் பயன்படுத்துகிறார்கள்.. ஆனால், இளம்பெண்களுக்கு இந்த டிக்டாக் மோகம் தலைக்கேறிவிட்டால் நல்லது, கெட்டதுகூட வகைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
வர்ணிப்பு
முதலில் கமெண்ட்களுக்கு ஏங்குகிறார்கள்.. அதன்பிறகு தங்களை வர்ணிப்பதை மெய்மறந்து ரசிக்கிறார்கள்.. அழகை புகழ்ந்ததும் உச்சி குளிர்ந்து விடுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்று குறைந்துவிட்டால், உடனடியாக லைக்குகள், கமெண்ட்கள் வருவதற்கு எந்த லெவலுக்கும் செல்கிறார்கள்., அறை குறை டிரஸ், ஆபாச அசைவு, கிளாமர் நடிப்பு என வகைகள் வெளிப்படுகிறது. இப்படித்தான் ராஜேஸ்வரியும் ஆகிவிட்டார். நிறைய ஆண்கள் இவருக்கு டிக்டாக் மூலம்தான் அறிமுகமாகி உள்ளனர்.
ஆட்டுக்கல்
தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு டிக்டாக் வீடியோ ஒன்றினை ராஜேஸ்வரி போட்டுள்ளார். அதிலும் இவர் காதலர் தினத்தை வாழ்த்தி போட்ட பதிவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் வந்துள்ளன.. இதுவரை போட்ட 300 வீடியோவில் பெரும்பாலும் எல்லாமே லவ் வீடியோதானாம்.. கிளாமர் கிளாமர் வீடியோக்களாம் எல்லாம்!
கமெண்ட்கள்
இதில் ஒரு வீடியோவில் சில இளைஞர்கள் ராஜேஸ்வரியை இழுத்து படுக்கையில் போட்டு அமுக்குவது போன்றும் உள்ளதாம்.. அது இறந்துபோன ராஜேஸ்வரிதான் என்றும் கமெண்ட்கள் வருகின்றனவாம். ஆனாலும் அது ராஜேஸ்வரியா, அல்லது வேறு வீடியோ பதிவினை தேவையில்லாமல் யாரேனும் இப்படி ராஜேஸ்வரி பெயரில் கிளறி விடுகிறார்களா என்று போலீசார்தான் உண்மை தன்மையை ஆராய வேண்டும். இறந்து போன ராஜேஸ்வரி இப்படி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டார் என்றதுமே, ஏராளமானோர், அவரது ஐடியை கண்டுபிடித்து வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.
Recommended Video
விசாரணை
சிலர் டவுன்லோடு செய்தும் ஷேர் செய்து வருகிறார்கள்.. யாரெல்லாம் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஆடியவர்கள், பாடியவர்கள் என மொத்த பேரின் லிஸ்ட்டையும் போலீசார் எடுக்க உள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், குமரவேலுவை கொலை செய்யும்வரை தூண்ட செய்ததால் இந்த நடவடிக்கை என தெரிகிறது.
எப்படியோ.. சிகரெட், மது மட்டுமல்ல... டிக்டாக் கூட மெல்ல மெல்ல கொல்லும் உயிர்கொல்லிதான்!!