கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்டர் டேங்கில் துர்நாற்றம்.. மேலே ஏறி பார்த்தவர்களுக்கு ‘ஷாக்’.. கடலூர் அருகே பரபரப்பு!

குடிநீர் தொட்டிக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், சந்தேகமடைந்த கிராம மக்கள், குடிநீர் தொட்டியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Dead body found in water tank near Virudhachalam cuddalore

மேலும் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சடலமாகக் கிடந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் கொண்டு வந்து போட்டார்களா? எனவும் அவ்வாறு அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதற்கு என்ன காரணம்? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞரின் சடலம் கிடந்த அந்த குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
A dead body of a youth was found in an overhead drinking water tank near Virudhachalam in Cuddalore district. As the foul smell was emanating from the water tank, villagers climbed into the drinking water tank and looked into it. Then the body was found inside the drinking tank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X