கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்.எல்.சி. கொதிகலன் வெடித்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், மேலும் ஒரு ஒப்பந்த தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தள்ளிப்போனது 10ம் வகுப்பு தேர்வு.. ஜூன் 15ல் துவக்கம்.. தேர்வு கால அட்டவணை வெளியீடுதமிழகத்தில் தள்ளிப்போனது 10ம் வகுப்பு தேர்வு.. ஜூன் 15ல் துவக்கம்.. தேர்வு கால அட்டவணை வெளியீடு

Death toll rises to 5 in Neyveli NLC fire

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்திப் பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ஆம் தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Death toll rises to 5 in Neyveli NLC fire

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

Death toll rises to 5 in Neyveli NLC fire

இதில் நிரந்தர ஊழியர்கள் சர்புதீன், பாவாடை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், பாலமுருகன் ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒப்பந்த தொழிலாளி அன்புராஜன் (47) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் என்.எல்.சி. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Death toll rises to 5 in Neyveli NLC fire
English summary
Death toll rises to 5 in Neyveli NLC fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X