நான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்!
போலீசுக்கு கஞ்சா வியாபாரி ஒருவர் சவால் விடும் வீடியோ ஒன்று வைரலாகிறது
Recommended Video
நெய்வேலி: "நான் பெங்களூர் மணி பேசுகிறேன். ஆமா நான் கஞ்சா விக்கறேன்.. சுரேஷை வெட்ட போறேன்... முடிஞ்சா என்னை பிடி" என்று போலீசாருக்கு சவால் விடுத்த இளைஞரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன். நெய்வேலி மந்தாரகுப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.
இவருக்கு வேலையே, பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும்போதெல்லாம், கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து, நண்பர்களுக்கு தருவதுதானாம்!
வெட்ட போறேன்
இப்படி தரும்போது, சக நண்பரான சுரேஷ் என்பவருடன் இவருக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய போவதாகவும், இது சம்பந்தமாக போலீசார் முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் பேசி ஒரு வீடியோவை மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி
வீடியோவில், அது ஒரு காட்டுப்பகுதி போல உள்ளது. 5, 6 இளைஞர்கள் உள்ளனர். அதில் ஒருவர் வீடியோவில் பேசி உள்ளதாவது: "நான் பெங்களூர் மணி என்ற மணிகண்டன் பேசுகிறேன். 28 வயசு. நான் நெய்வேலியில கஞ்சா விக்கறேன்.
கஞ்சா விக்கிறேன்
என்கிட்ட ஆதார் கார்டு, ஐடி ப்ரூப் இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும். கஞ்சா விக்கறதை தடுக்கற சுரேஷை வெட்ட போறேன்னு சொல்லி இருந்தேன். முடிஞ்சா என்னை போலீஸ் கைது செய்யட்டும்" என்று சவால்விடும் தொனியில் பேசியிருக்கிறார். வீடியோவில் உள்ளவர்கள் மற்றவர்கள், மணியிடம் கஞ்சா வாங்கி அடிப்பவர்கள் என தெரிகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோ, போன ஏப்ரல் மாசம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தவிஷயம், போலீசாரின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து மணியை தேடும் படலம் நடக்கிறது. எனினும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது!