ரூ. 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ 5 லட்சம் கொடுத்தால் என்ன- கமல்ஹாசன் கேள்வி
கடலூர்: தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்காதீர் என கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் 70-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடலூரில் ஒரு பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில் நோட்டா வாக்கு உங்கள் வெறுப்பை காட்டுகிறது, விருப்பத்தை காட்டவில்லை. தேர்தலின்போது ஓட்டுப் போடுவதற்கு பணம் வாங்கக் கூடாது.
மக்களுக்கு பணியாற்ற மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்பு தாருங்கள். அரசு ஊழியர்களை ஏன் வேலை செய்ய வில்லை என நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
நாடு மாறுவதற்கு மக்கள் பங்களிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த பெண்கள் கோரிக்கை வைக்க வேண்டும். கிராம நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும்.
சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் நாம் என்றார் கமல். அதுபோல் அவர் இன்று பல்வேறு இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.