கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்!

லாரியில் இருந்த கயிறு சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சிதம்பரம்: லாரியில் இருந்து ஒரு கயிறு பறந்து வந்து, ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் கழுத்தில் சிக்கி கொண்டுவிட்டது.. பிறகு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த லாரி அந்நபரை அப்படியே தரதரவென ரோட்டில் இழுத்து சென்றதில், அந்த நபர் முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

புது பூலமேடு அருகே அந்த லாரி சென்றபோது, லாரியின் மேற்புறத்தில் அதாவது டாப்பில் இருந்த கயிற்றின் முனையை பிடித்தபடி, ஒருவர் சாலையில் இழுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

"திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் நாடு நன்றாக இருக்காது".. அதிமுகவின் கல்யாண சுந்தரம் பேட்டி

டிரைவர்

டிரைவர்

இதை லாரிக்கு பின்னாடி பைக்கில் வந்த ஒருவர் பார்த்துள்ளார்.. உடனே லாரியை நெருங்கி அந்த டிரைவரிடம் இதை பற்றி சொல்லவும், அந்த டிரைவரோ லாரியை நிறுத்திவிட்டு, அப்படியே எகிறி குதித்து ஓடிவிட்டார்.. பிறகு, கயிற்றால் இழுத்து வரப்பட்டவரை மீட்க சென்றால், அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.. அவர் முகம் சிதைந்து போய் கிடந்தது.

கயிறு

கயிறு

சரக்கு லாரி வழக்கமாகவே படுவேகமாக செல்லும் என்பதால், இந்த லாரியின் பின்னால் கயிற்றில் சிக்க கொண்டவரும் ரோட்டில் அதே வேகத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.. பிறகு போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் பெயர் அன்புசெல்வன் என்பதும், அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

 அலட்சியம்

அலட்சியம்

அதாவது, அது சரக்கு லாரி என்பதால், சரக்குகளை கட்டுவதற்காக பெரிய பெரிய தடித்த கயிறுகளை சுருட்டி வைத்திருப்பது வழக்கம்.. ஆனால், அந்த கயிறுகளை சரியாக சுருட்டி வைக்காமல் வேண்டுமென்றே அலட்சியமாக லாரியின் கூரைமீது போட்டிருக்கலாம் என்றும், லாரி சென்ற வேகத்தில் அந்த கயிறு காற்றில் பறந்து ரோட்டில் சென்று கொண்டிருந்த அன்புசெல்வனின் உடலை இறுக்கி இழுத்து கொண்டு வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 விசாரணை

விசாரணை

ஆனால், அந்த லாரி டிரைவர் கிடைத்தால்தான் உண்மை தெரியவரும் என்பதால், அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. லாரி டிரைவர் பெயர் பிரபு.. வல்லம்படுகைகையை சேர்ந்தவராம்.. லோடு இறக்கிவிட்டு வரும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

English summary
Man killed by Lorry Rop near Cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X