செல்வியை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர் "பெரிய மனுஷன்".. கலங்க வைக்கும் வீடியோ
பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்
Recommended Video
கடலூர்: "உன் பையன் என் பொண்ணை எங்கே கூட்டிட்டு போய் வெச்சிருக்கான்" என்று கேட்டு பெண்ணின் அம்மா செல்வியை ஊர் பெரிய மனுஷன் ஒருவர் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளார். செல்வி அடி வாங்கும் போட்டோக்கள் இணையத்தில் கலங்கடித்து வருகின்றன.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பொன்னுசாமி- செல்வி. இவர்களுக்கு 25 வயதில் பெரியசாமி என்ற மகன் உள்ளார்.
பெரியசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் பவளிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பவளி, பவளி, திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலைபார்த்து வந்தார்.
பிரச்சனை
இவர்களின் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும், பவளிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட்டார்கள். இந்த விஷயத்தை பவளி காதலனிடம் சொல்ல.. காதலர்கள் இருவரும் சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.
தகராறு
இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. நேற்று சாயங்காலம், பெரியசாமியின் தாய் செல்வி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பவளியின் தந்தை கொளஞ்சியிடம் தகராறில் ஈடுபட்டார்.
கட்டி வைத்தார்
"ஏன் உன் மகன் என் மகளை இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை, உன் மகன் என் மகளை எங்கே வெச்சிருக்கான்?" என்று கேட்டு செல்வியை கடுமையாக சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார். பிறகு அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கியுள்ளார்.
சிகிச்சை
இதை கிராம மக்கள் நேரிடையாக பார்த்தும் தடுக்க முடியாமல் திணறினர். பின்னர் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.