என்எல்சி பாய்லர் வெடித்த விபத்து- மருத்துவமனையில் மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
நெய்வேலி: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி காலையில் திடீரென பாய்லர் வெடித்தது. 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பாய்லர் வெடித்து சிதறியதில் அங்கேயே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் அடுத்தடுத்து நேற்று மாலை வரை உயிரிழந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தனர்.
கொரோனா- டெல்லி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலையில் சர்ச்சை
இந்நிலையில் இன்று காலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து நெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.