"நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே".. காக்கி சட்டை + ஹெட்போன் = கலக்கும் ஏட்டு சிவபெருமாள்!
சாலை விதிகள் குறித்த ஏட்டு சிவபெருமாள் பாடிய பாடல் வைரலாகிறது.
Recommended Video
கடலூர்: "நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே" என்று ரெக்கார்டிங் தியேட்டரில் காக்கி சட்டை உடையுடன் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாடுகிறார் சிவபெருமாள்!
இதற்கு முந்தைய கால கட்டத்தைவிட, இப்போதெல்லாம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை பல வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம், விபத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால்தான்.
இதற்காக விழிப்புணர்வுகளை துறை ரீதியாக போலீசார்கள் முன்னின்று செய்து வந்தாலும், தனிநபர் விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது ரொம்பவும் குறைவுதான். அப்படிப்பட்ட வெகுசிலரில் ஒருவர்தான் ஏட்டு சிவபெருமாள். சிதம்பரம் அருகே உள்ள மருதூர் ஸ்டேஷனில்தான் இவர் ஏட்டாக வேலை பார்க்கிறார்.
சாலை விதிகளை மதிப்பது குறித்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். ரிக்கார்டிங் தியேட்டரில் நாம் பலவித ஆட்களை பார்த்திருப்போம். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் காக்கி சட்டையில் ஹெட்-போனை காதில் மாட்டி கொண்டு பாடுவதை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.
இந்தியா போருக்கான விதைகளை தூவுகிறது.. பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சாலை விதிகளை மதிப்பது குறித்த பாடல் இது என்பதால், ஒரு வண்டியை சிவபெருமாள் விடவில்லை. கார், பஸ், டூவீலர் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து பாடுகிறார். "போடுங்க.. ஹெல்மெட்டை போடுங்க.. உங்களுக்கு விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம்" என்று தொடங்குகிறது பாடல்.
காரில் சீட் பெல்ட் போடுங்க, டாடா ஏசியில் ஆட்களை ஏற்றாதே, இன்சூரன்ஸ் இல்லா வாகனத்தை ஓட்டாதே, படியில் பயணம் நொடியில் மரணம், சாலைவிதிகளை மதிக்கணும், சாவே இல்லாமல் வாழ்ந்து காட்டு, செல்போனில் பேசிக்கிட்டு வாகனத்தை ஓட்ட கூடாது, ஓடும் பேருந்தில் ஓடிப்போயி ஏறாதே, நேரம் சரியில்லேன்னா 108-ல போவேதான், ஓசியில வண்டி வாங்கி ஓவர் ஸ்பீடா ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே, போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க, லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டக்கூடாது" என்ற வரிகள் அடங்கி உள்ளது.
இந்த வீடியோவில் நடுநடுவே சாலை விபத்து காட்சிகளும் காட்டப்படுகின்றன. சிவபெருமாள் எழுதி, பாடி, வெளியிட்டுள்ள, இந்த வீடியோதான் சோஷிய மீடியாவில் வெளியாகி, மக்களின் கவனத்தை ரொம்பவே ஈர்த்து வருகிறது.