கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்-வீடியோ

    விருதாச்சலம்: மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கிவிட்டு, நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த காதலன் இழுத்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் விருதாச்சலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    விருத்தாசலம் அடுத்த மணக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் இளம்பாரதி. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வித்யா என்பவரை காதலித்து வந்தார். இருவருமே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். வித்யா இப்போது, சென்னையில் நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார். காதலர்கள் இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    புது தாலியின் வாசம் கூட போகவில்லை.. பெண்ணின் உடம்பில் ஏறி இறங்கிய லாரி.. விழுப்புரம் அருகே பயங்கரம்!புது தாலியின் வாசம் கூட போகவில்லை.. பெண்ணின் உடம்பில் ஏறி இறங்கிய லாரி.. விழுப்புரம் அருகே பயங்கரம்!

    விருதாச்சலம்

    விருதாச்சலம்

    இந்நிலையில் வித்யாவுக்கு வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்து முடித்தனர். அதன்படி, அவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக வித்யாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து கொண்டு, உளுந்தூர்பேட்டையில் இறங்கி விருத்தாசலம் வருவதற்காக குடும்பத்தினர் காத்திருந்தனர்.

    வித்யா

    வித்யா

    விஷயத்தை கேள்விப்பட்டு, அப்போது, அங்கே வந்த, காதலன் இளம் பாரதி, மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி கீழே சாய்த்துவிட்டு, வித்யாவை தன்னுடன் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் ஆலடி ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் சம்பவம் நடந்தது உளுந்தூர்பேட்டை என்பதால் புகாரை ஏற்க போலீஸ் தரப்பில் மறுத்ததாக கூறப்படுகிறது.

    சாலைமறியல்

    சாலைமறியல்

    இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொட்டாரக்குப்பம் கிராமம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஒருதலைபட்சமாக செயல்படும் ஆலடி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்ணை மீட்டு தர கோரியும் முழக்கமிட்டனர்.

    சமாதானம்

    சமாதானம்

    மேலும், "ஆதலால் காதல் செய்வீர்" என்ற அமைப்பின் மூலம் செயல்படும் செல்வ விநாயகத்தை கைது செய்ய கோரியும், நாடக காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை வாழ்க்கையை சீரழிப்பதற்கு தூண்டுதலாக செயல்படும் சிறுத்தை கட்சியை தடை செய்ய கோரியும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகலறிந்து வந்த போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பெண்ணை மீட்டுத் தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    தற்போதும், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருவதால் அங்க பெரும் பதட்டம் நிலவுகிறது.

    English summary
    Near Virudhachalam Village People Protest against young man and Police due to Love issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X