கொல்லப்பட்ட மணிகண்டன்.. நான்தான் செஞ்சேன்.. சரணடைந்த அண்ணி... காரணம் அதுதான்... 4 பேர் கைது!
இளைஞரை கொன்ற அண்ணி போலீசில் சரண் அடைந்துள்ளார்
Recommended Video
கடலூர்: இளைஞரை யார் கொன்றார்கள் என்று போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென அந்த இளைஞனின் அண்ணி போலீசில் சரண் அடைந்து அதிர்ச்சி தந்துள்ளார்.. காரணம் மச்சினனுடன் அண்ணிக்கு உறவு இருந்ததாம்!
திட்டக்குடி அருகே வையங்குடி என்ற பகுதி உள்ளது. இங்கு மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 26-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், அவரது அண்ணன் மனைவி காசியம்மாள் போலீஸ் ஸ்டேஷன் வந்து சரணடைவதாக கூறினார். இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சொன்னதாவது: "என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் நானும், மச்சினன் மணிகண்டனுக்கும்தான் இருப்போம்.. எங்களுக்குள் தவறான உறவு இருந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் போதையில் இருந்தார்.
எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.. அந்த தகராறு கைகலப்பு வரை போய்விட்டது. அதனால் கோபம் அடைந்து, என் சொந்தக்காரரின் 17 வயது பையனுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தேன்" என்று போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.