அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கில் 11 பேரின் செல்போனைத் திருடிட்டாங்க.. பாஜக எம்பி போலீஸில் புகார்
Recommended Video
டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் திஜாரவாலா என்பவர் டெல்லி போலீஸ் மற்றும் அமித்ஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிக்சை பெற்று ஜெட்லி சிகிச்சை பலனின்றி கடந்த 24-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அருண் ஜெட்லியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்த ரூ.1.76 லட்சம் கோடி எங்கே போனது.. ஆர்பிஐயிடம் திருடாதீர்கள்..பரபரக்கும் காங்கிரஸின் புகார்!
பின்னர் ஜெட்லியின் உடல் டெல்லியின் யமுனை ஆற்றாங்கரையில் அமைந்துள்ள நிகம்போத் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.இந்த இறுதி சடங்கில் பாஜக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
कृपया ध्यान दे @DelhiPolice @AmitShah @AmitShahOffice @PIBHomeAffairs
— Tijarawala SK (@tijarawala) August 26, 2019
कल निगमबोध घाट से मेरा और श्री @SuPriyoBabul सहित 11 लोगों का फोन #निगमबोधघाट से हो गया था।
1. मेरा फोन अभी करावल नगर में है। उसकी लोकेशन का स्क्रीन शाट संलग्न है। पकड़ सकते हैं तो पकड़ लें। @ani @PTI_News https://t.co/2p424zLQPc pic.twitter.com/1SMWYj46Vh
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக பதஞ்சலி நிறுவன செய்தி தொடர்பாளர் எஸ்கே திஜரவாலா டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் தனது பதிவில் செல்போன் தொலைந்து போன லோக்கேசனை பதிவிட்டதுடன், டெல்லி போலீஸ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி காஷ்மியர் கேட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.