நாடு முழுவதும் மேலும் 12,881 பேருக்கு கொரோனா... கர்நாடகாவில் சற்று அதிகரிக்கும் பாதிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,881 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு மேலும் 101 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 11,987 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1,06,56,845 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் கோவோக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 94,22,228 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கொரோனா ருத்ரதாண்டவம்
உலகம் முழுவதும் ஒரு ஆண்டை கடந்த பின்னரும் கொரோனா தாக்கம் இன்னும் முடியவில்லை. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
கர்நாடகாவில் அதிகரிக்கும் பாதிப்பு
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அடங்க மறுக்கிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேராளாவில் இருந்து வருபவர்கள் காரணமாக அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
12,881 புதிய பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 12,881பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கு மேலும் 101 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் 11,987 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு 1,09,50,201 ஆக உயர்ந்துள்ளது.
94,22,228 பேருக்கு தடுப்பூசி
கொரோனாவுக்கு இதுவரை 1,56,014 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,06,56,845 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் 1,37,342 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கோவோக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 94,22,228 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.