ஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு!
டெல்லி: ஏஎன் 32 விமானப்படை விமான விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே மாயமானது. விமானப்படை தளத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
அபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு!
இதனால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தேடுதல் பணில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இறங்கியது.
தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தன. நவீன் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப் படை விமானங்கள் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டன.
தீவிர தேடுதலை தொடர்ந்து விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை முதலில் அறிவித்தது.
இந்நிலையில் 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவுத் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.