ஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
டெல்லி: ஜி.எஸ்..டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
உலகின் 5-வது பொருளாதார சக்தியாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலிமையாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த சீர்திருத்த நடவடிக்கை.
3 முக்கியமான விஷயத்தை மனதில் வைத்தே பட்ஜெட்டை உருவாக்கினேன்.. விளக்கிய நிர்மலா.. என்ன தெரியுமா?
பொருளாதார ரீதியாக நாட்டை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ஒருங்கிணைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கட்டமைத்தவர் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஜி.எஸ்.டி. அமலுக்குப் பின்னர் குடும்ப செலவினங்கள் 4% குறைந்துள்ளது. 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது.
தற்போது 40 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் கோடி நன்மை கிடைத்துள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.