24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23,452
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்:
கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை நாட்டில் கொரோனாவால் மொத்தம் 23, 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூர தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலு 4814 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லியில் 14 வயது பெண்புலி கல்பனா மரணம்- கொரோனா சோதனையில் ரத்த மாதிரிகள்!
மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 283. இதனையடுத்து குஜராத்தில் 2624 பேர் பாதிக்கப்பட்டும் 112 பேர் மரணமடைந்தும் உள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2376 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் 1852; தமிழகத்தில் 1755 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் 1964 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 1604 பேரும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஒடிஷாவில் 90 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 33 பேர் குணமடைந்துள்ளனர்.