அறிகுறி இல்லாமலேயே 186 பேருக்கு கொரோனா பாதிப்பு- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஷாக் தகவல்
டெல்லி: டெல்லியில் அறிகுறி இல்லாமலேயே 186 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
டெல்லியில் லாக்டவுனில் எந்த தளர்வும் இல்லை. ஏனெனில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தற்போது அவசியமானது.
டெல்லியின் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுனை தளர்த்த மாட்டோம். டெல்லியில் நேற்று 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதயமற்ற அரசாங்கம் மட்டுமே ஒன்றும் செய்யாது.. டுவிட்டரில் மத்திய அரசு மீது ப சிதம்பரம் கடும் தாக்கு
இந்த 186 பேருக்கும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது என்பதுதான் அதிர்ச்சிக்குரியதாகும். டெல்லியில் மீண்டும் அதாவது ஒருவாரத்துக்குப் பின்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
Recommended Video
அதேநேரத்தில் டெல்லி மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.