டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்

    டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் ஜோத்பூர் ரயில் நிலையத்தில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இருவரும் ராஜஸ்தானின் போக்ரானில் இருந்து தங்கள் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
    இருவருமே ஜோத்பூரிலிருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    2 army men arrested in Rajasthan for leaking info to woman ISI agent

    ராஜஸ்தான் கூடுதல் இயக்குநர் ஜெனரல் உமேஷ் மிஸ்ரா இதுபற்றி கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இரு வீரர்களும் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த, பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை, பகிர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.

    இரு வீரர்களும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வழியாக பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பி வந்துள்ளனர். கைதானவர்களில் ஒருவரான ரவி வர்மா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், விச்சித்ரா போஹ்ரா அசாமைச் சேர்ந்தவர்.

    உங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்உங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்

    இவர்களிடம் பாகிஸ்தான் உளவு பெண், பாகிஸ்தான் எண்ணிலிருந்து வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) சேவையைப் பயன்படுத்தி அழைத்து பேசி வந்துள்ளார். அந்தப் பெண் பஞ்சாபி போல ஹிந்தி உச்சரிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த பெண் பேசிய எண், மறுமுனையில் இந்த இரு வீரர்களுக்கும், இந்திய எண் போல செல்போன் திரையில் தோன்றுமாம். அதுபோன்ற டெக்னாலஜியை பயன்படுத்தி, உளவு பெண் பேசியுள்ளார்.

    இவர்களும், இந்திய பெண் என்று நினைத்துதான் பேசியுள்ளனர். ராஜஸ்தானில் ராணுவம் அனுப்புவது, ராணுவ உபகரணங்கள் மற்றும் பிற முக்கியமான விவரங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை அந்த பெண்ணுடன் இவர்கள், பகிர்ந்து கொண்டனர்.

    English summary
    Two Indian soldiers have been taken into custody from the Jodhpur railway station on charges of sharing crucial information with a Pakistan-based woman ISI agent.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X