'ஷாக்..' காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு
டெல்லி; ஜம்மு - காஷ்மீரில் பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டர் பாட்னிடாப் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே, ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்க விமானிகள் முயன்றுள்ளனர்.
Army Helicopter crash at Shivgarh Dhar Patnitop in district Udhampur. 2 personnel injured one of them serious. Villagers launched rescue operation and evacuated them from deep George.
— OSINT J&K (@KmrAk47) September 21, 2021
More details awaited pic.twitter.com/wb5yaZNucY
ஆனால், அது மலைப்பகுதி என்பதால் பத்திரமாக விமானத்தை அவர்களால் தரையிறக்க முடியவில்லை. தரையிறங்கும்போது அங்குள்ள மரங்களில் மோதி, ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும் இரண்டு விமானிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த விமானிகள் மேஜர் ரோஹித் குமார் மற்றும் மேஜர் அனுஜ் ராஜ்புட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.