டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவில் ஜெகன் கொடி.. ஒடிசாவில் தொடரும் நவீன் ராஜ்யம்.. அதிர வைத்த 4 மாநில தேர்தல் முடிவுகள்!

லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!

    டெல்லி: லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்துள்ளார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

    கடந்த ஒரு மாதமாக நடந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஏப்ரல் 11ம் தேதி இந்தியாவில் லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியானது.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    மாநில தேர்தல்

    மாநில தேர்தல்

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இதில் ஆந்திர பிரதேசம், சிக்கிமில் கடுமையான போட்டி நிலவியது. அதேபோல் ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் ஆட்சியை பிடிப்பாரா என்று கேள்வி எழுந்து இருந்தது.

    ஆந்திர பிரதேசம் தேர்தல்

    ஆந்திர பிரதேசம் தேர்தல்

    ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும். இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    அருணாச்சலப்பிரதேச தேர்தல்

    அருணாச்சலப்பிரதேச தேர்தல்

    அருணாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் 60 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது பாஜக கட்சி 33 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பெரும்பான்மை பெற்று அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் 3 இடங்களிலும், என்பிபி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வென்றது.

    அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!

    சிக்கிம் தேர்தல்

    சிக்கிம் தேர்தல்

    சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

    ஒடிசா தேர்தல்

    ஒடிசா தேர்தல்

    ஒடிசாவில் மொத்தம் 147 இடங்களில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 74 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 113 இடங்களில் வென்று மீண்டும் 5 வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளது. அங்கு காங்கிரஸ் 9 இடங்களையும், பாஜக 22இடங்களையும் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வென்றுள்ளது.

    English summary
    4 State assembly elections: Arunachal, Andhra, Sikkim, Odisha will see their fate today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X