51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்!
டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு 51 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இரங்கல் தெரிவித்து குறிப்புகளை கைப்பட எழுதியுள்ளனர். இதை புத்தகமாக தொகுத்துள்ளது ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகம்.
சமீபத்தில் உடல் நல பாதிப்பாலும், மாரடைப்பாலும் மரணமடைந்தார் சுஷ்மா சுவராஜ். அவருக்கு உலக நாடுகள் பலவும் புகழஞ்சலி செலுத்தின. இந்த நிலையில் ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர செயலகம் ஒரு இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்து கொண்டு 51 நாடுகளின் தூதர்கள் தங்களது கைப்பட சுஷ்மாவுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்புகளை எழுதினர். இதை புத்தக வடிவில் திரட்டியுள்ளது இந்திய தூதரகம். இதுகுறித்து இந்திய தூதர் சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள டிவீட்டில், உலக நாடுகளின் தூதர்கள் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்புகளை எழுதியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
In diplomacy, words matter...
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) August 10, 2019
Diplomats from all across the world visit @IndiaUNNewYork to record condolences on the sad demise of Madam @SushmaSwaraj
🙏🏽 pic.twitter.com/f2NxWxHiGg
இதுதொடர்பான 2.20 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவையும் இந்தியத் தூதர் டிவீட்டில் இணைத்துள்ளார். அதில் உலக நாடுகளின் தூதர்கள் இரங்கல் குறிப்புகளைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
தீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக
ரஷ்யா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், போட்ஸ்வானா, பிரேசில், தென் கொரியா, எகிப்து, பிஜி, ஜார்ஜியா, கானா, கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மால்டா, மியான்மர், நேபாளம், நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அதில் சில.