திரிபுராவில் பாஜக ஆட்சி கவிழும் அபாயம்- 7 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியுடன் டெல்லியில் டேரா
டெல்லி: திரிபுராவில் ஆளும் பாஜக முதல்வர் பிப்லாப்குமார் தேப்-க்கு எதிராக 7 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் இடதுசாரிகள் கோலோச்சி ஆண்டு வந்தனர். அந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ்தான் இருந்து வந்தது. திரிபுராவில் பாஜக என்ற கட்சியே இல்லாமல் இருந்தது.
ஆனால் திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே அப்படியே விழுங்கியது பாஜக. இதனால் திரிபுரா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளின் கோட்டையில் காவி கொடி பட்டொளி வீசி பறந்தது. முதல்வராக பிப்லப்குமார் தேப் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் மீது 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்கவும் அவர்கள் முகாமிட்டுள்ளனர்.
பீகார்: கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுத் தாக்கல்: 9 மூத்த பாஜக தலைவர்கள் டிஸ்மிஸ்
முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை மாற்ற வேண்டும் என்பது இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கோரிக்கை. தங்களுக்கு மேலும் பல எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் திரிபுராவில் பாஜக அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.
தன்வினை தன்னைச் சுடும்!