அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐசிஎம்ஆர்.. இந்தியாவில் 80% நோயாளிகளுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
Recommended Video
மகாராஷ்டிரா முதல்வர் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்பதை கூறி இருந்தார். நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இவர்களில் யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம். கவலைக்குரிய விஷயமாக இது இருக்கிறது என்பதை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐசிஎம்ஆரும் தற்போது இதே தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு அறிகுறி இருந்தால் மட்டும் நான் அவரை அவருக்கான பரிசோதனைகளை செய்ய வேண்டிய நடைமுறையை இந்திய அரசு செய்து வருகிறது.
ஆனால் நிறைய பேருக்கு இந்த அறிகுறி இல்லாமல் இருக்கக் கூடிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளது ஐசிஎம்ஆர். அதுவும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அல்ல. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
முதல்நாள் 19 மறுநாளே 36.. பகீர் கிளப்பும் தேனாம்பேட்டை.. கொத்து கொத்தாக புதிய கொரோனா கேஸ்.. பின்னணி!
மும்பையை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருக்கும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கிறது.
அரசின் சார்பாக பொதுவாக ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று செய்ததில் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று வந்து இருக்கின்றது. எனவே இது எந்த அளவிற்கு இக்கட்டான ஒரு சிக்கலான விஷயமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஏனென்றால் அறிகுறிகள் இருப்பவர்களைத்தான் நாம் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கி வருகிறோம். ஆனால் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் கொரோனா பெரிய அளவில் பரவி வருகிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படி எத்தனை பேர் நாடு முழுவதும் அறிகுறி இல்லாமல், பிறருக்கும் நோயை பரப்பி வருகிறார்களோ தெரியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளோருக்கு கொரோனா அறிகுறி காட்டுவதில்லை. ஆனால் அவர்களால் பிறருக்கு பரவுகிறது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் சுமார் 60 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பரிசோதனை அளவு அதிகரிப்பது மட்டும்தான், இந்த பிரச்சினைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.