டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்கள் தற்கொலை.. காவிரி டெல்டா குறித்து பாஜக எம்பி வருண்காந்தி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்களும், 68 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளதாக லோக்சபாவில் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

நதிநீர் மசோதா குறித்து லோக்சபாவில் பாஜக எம்பி வருண்காந்தி பேசுகையில், தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்களும், 68 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

827 farm workers and 68 farmers commit suicide in Tamil Nadu: says varun gandhi

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 67 சதவீதம் பேர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நதிநீர் பிரச்சனையால் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுள்ளனர் என்றும் வருண் காந்தி கூறினார்.

இதற்கிடையே நதிநீர் மசோதா கூட்டாட்சி முறைக்கு எதிரானது என லோக்சபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில பட்டியலில் இருந்து நதிகளை மத்திய பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

English summary
bjp mp varun gandhi on lok sabha: 827 farm workers and 68 farmers commit suicide in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X