தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்கள் தற்கொலை.. காவிரி டெல்டா குறித்து பாஜக எம்பி வருண்காந்தி பேச்சு
டெல்லி: தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்களும், 68 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளதாக லோக்சபாவில் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
நதிநீர் மசோதா குறித்து லோக்சபாவில் பாஜக எம்பி வருண்காந்தி பேசுகையில், தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்களும், 68 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 67 சதவீதம் பேர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நதிநீர் பிரச்சனையால் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுள்ளனர் என்றும் வருண் காந்தி கூறினார்.
இதற்கிடையே நதிநீர் மசோதா கூட்டாட்சி முறைக்கு எதிரானது என லோக்சபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில பட்டியலில் இருந்து நதிகளை மத்திய பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.