டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதல்.. வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்றவாளியுடன் 23 வயது இளம்பெண்ணுக்கு தொடர்பு

Google Oneindia Tamil News

டெல்லி: புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 23 வயது பெண் குறித்து குற்றப்பத்திரிகையில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Pulwama Case: NIA files Charge Sheet | OneIndia Tamil

    2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பின் போது அவர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள்.

    சீனாவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் செக் வைக்கும் அமெரிக்கா.. 24 சீன நிறுவனங்ளுக்கு அதிரடி தடை சீனாவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் செக் வைக்கும் அமெரிக்கா.. 24 சீன நிறுவனங்ளுக்கு அதிரடி தடை

    பயங்கரவாத அமைப்பு

    பயங்கரவாத அமைப்பு

    புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கு உதவுவதில் ஒரு இளம்பெண் முக்கிய பங்கு வகித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதம் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர் முகமது உமர் பாரூக்.

    முக்கிய குற்றவாளி

    முக்கிய குற்றவாளி

    இவர் பாகிஸ்தான் வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்றவாளியாவார். இவருடன் இன்ஷா ஜான் எனும் 23 வயது இளம் பெண் தொடர்பில் இருந்ததாக என்ஐஏ ஆவணங்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் தொலைபேசி, சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    செய்திகள்

    செய்திகள்

    இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில் இளம்பெண்ணும் முக்கிய குற்றவாளியும் அவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட பல செய்திகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். அவை அவர்களின் நெருக்கத்தை குறிக்கின்றன. இதை நாங்கள் குற்றபத்திரிகையில் குறிப்பிட்டுள்ளோம். அந்த இளம்பெண்ணின் தந்தை தாரிக்கிற்கு மகளுடைய இந்த தொடர்பு அறியவந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்கள்.

    புல்வாமா அந்த பெண்ணின் தந்தையும் புல்வாமாவில் உமர் பாரூக் மற்றும் இரு பயங்கரவாதிகள் நடமாட்டத்திற்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது போக உணவு, தங்குமிடம், பிற தளவாடங்களை தந்தையும் மகளும் உதவியது தெரியவந்துள்ளது.

    புல்வாமா அந்த பெண்ணின் தந்தையும் புல்வாமாவில் உமர் பாரூக் மற்றும் இரு பயங்கரவாதிகள் நடமாட்டத்திற்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது போக உணவு, தங்குமிடம், பிற தளவாடங்களை தந்தையும் மகளும் உதவியது தெரியவந்துள்ளது.

    அந்த பெண்ணின் தந்தையும் புல்வாமாவில் உமர் பாரூக் மற்றும் இரு பயங்கரவாதிகள் நடமாட்டத்திற்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது போக உணவு, தங்குமிடம், பிற தளவாடங்களை தந்தையும் மகளும் உதவியது தெரியவந்துள்ளது.

    English summary
    A 23 years old girl helped for main conspirator in Pulwama attack. Her father also helped terrorists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X