டெல்லியில் உயிர்ப்பலி ஏற்படுத்திய வன்முறை... டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் டிடியு மார்க் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video
டெல்லியில் இன்று விவசாயிகள், போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. டெல்லி முழுவதும் பதற்றமாக உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி உள்ளது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.
செங்கோட்டை மட்டுமல்ல.. டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்திலும் விவசாயிகள்.. குவியும் டிராக்டர்கள்
போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லி முழுவதும் வன்முறைக்களமாக உள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயிகள் தடையை மீறி செல்கின்றனர். இந்த நிலையில் டெல்லியின் டிடியு மார்க்கில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதலின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த மோதலில் பல விவசாயிகள், போலீசார் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.