தடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும்? ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி : தடுப்பூசி செலுத்துவது மாற்றங்களுக்கு உள்பட்ட செயல் முறையாகும். இத்தனை நாட்களுக்குள் எல்லோருக்கும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் விதிக்க இயலாது எனறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 18 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு வரும் டிசம்பர் 31ம் தேதி தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளளது
அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம் புதிய உருமாறிய வைரஸ் வருமா? எய்ம்ஸ் இயக்குநர் பளிச்
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய் அகியோர் தடுப்பூசி தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர். 2021 டிசம்பருக்குள் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்படுமா, தடுப்பூசிகள் தடுப்பபாடு இல்லாமல் மக்களுக்கு விநியோகம் செய்யப்டுமா என்று கேள்விகளை எழுப்பினர்.
135 கோடி டோஸ்
இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய காதாரத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், 2021 ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், மொத்தம் 135 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை.
தடுப்பூசி
கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்காக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தல் மற்றும் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விநியோகித்தல் உள்ளிட்டவற்றுக்காக இதுவரை, 9,725 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
COVID-19 தடுப்பூசி ஒரு தொடர்ச்சியான மற்றும் மாறும் செயல்முறையாகும். இது ஒரே நேரத்தில் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் COVID-19 (NEGVAC) க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவால் வழிநடத்தப்படுகிறது. COVID-19 தொற்றுநோயின் மாறும் மற்றும் வளர்ந்து வரும் தன்மையைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி இயக்கி முடிக்க தற்போது நிலையான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மத்திய அரசு நம்பிக்கை
எனினும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனாளிகளுக்கு டிசம்பர் 2021 க்குள் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, " இவ்வாறு அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.