டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அனாஜ் மண்டி விபத்துக்கு பிறகு.. டெல்லியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல்பு தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பரவியது.

A Large fire broke out in West Delhi factory

இதையடுத்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவி வருகிறது. இதுவரை உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

கடந்த 8-ஆம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டியில் உள்ள பை தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 43 ஊழியர்கள் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Major fire breaks out in a plywood factory in West Delhi's Mundhka today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X