கெஜ்ரிவால் மீது தாக்குதல்... கன்னத்தில் அறைந்த இளைஞரால் பெரும் பரபரப்பு
டெல்லி: பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் மோதி நகரில், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பிரச்சாரத்தில் வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, மோசமான வார்த்தைகளை சொல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அடித்தார்.
திடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்த நிலையில், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்குதல் நடத்தியவரை ஆம்ஆத்மி கட்சியினர் பிடித்து, தாக்குதல் நடத்தினர்.
18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு காரணமே தினகரன் தான்... சொல்கிறார் செந்தில் பாலாஜி
போலீசார் உடனடியாக வந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
#WATCH: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language) pic.twitter.com/laDndqOSL4
— ANI (@ANI) 4 May 2019
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய இளைஞர். எந்த கட்சியைச் சேர்ந்தவர். யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.