ஊரெல்லாம் கொரோனா ஆட்டம்.. நம்ம ஆனந்த் மஹிந்திரா காட்டிய குரங்கு வித்தையைப் பாருங்க மக்களே!
டெல்லி: ஊர்ல கொரோனா தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில் எந்த கவலையும் இல்லாமல் குரங்கு ஒன்று டிஷ் ஆன்டென்னாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
குரங்குகள் என்றாலே மனிதர்களை போல் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது, சிரிப்பது, உட்கார்வது, குளிப்பது போன்ற செயல்களை செய்து ஆச்சரியப்படுத்தும். இதை பார்க்கும் போது குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற சொல்வடை நம் நினைவுக்கு வந்து செல்லும்.
அந்த வகையில் குரங்குகளும் அதன் குட்டிகளும் மனிதர்களே வியக்கும் அளவு சில செய்கைகளை செய்யும். தற்போது தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா குரங்கு குறித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நேரம்தான்.. கொரோனா தடுப்பு மருந்து எடுத்தவருக்கு உடல் நலக்குறைவு.. ஆய்வை நிறுத்திய ஜான்சன் & ஜான்சன்
புகைப்படம்
அதில் குரங்கு ஒன்று டிஷ் ஆன்டென்னா குடையில் மிகவும் கச்சிதமாக ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் இருந்தன. இந்த புகைப்படத்திற்கு பொருத்தமான பட வரிகளை அனுப்பும் போட்டியை ஆனந்த் அறிவித்தார். இந்த போட்டியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் அனுப்ப வேண்டும்.
படவரி
இதிலிருந்து இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் ஆங்கிலத்திற்கு, மற்றொருவர் இந்திக்கு. வெற்றி பெறுவோருக்கு மகிந்திரா வாகனம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து அந்த படத்திற்கு ஏராளமானோர் படவரிகளை அனுப்பியுள்ளனர்.
இருவர் தேர்வு
இதுவரை 88 ஆயிரம் பேர் பதில் அனுப்பியுள்ளார்கள். அதிலிருந்து இருவரை ஆனந்த் மகிந்திரா தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியில் வள்ளி சூர்யா என்பவர் அனுப்பிய ஏக் பந்தர்.. டிவி கே அந்தர் என்ற படவரியும், ஆங்கலத்தில் தி சேம் வால் என்ற டிவிட்டர்வாசி அனுப்பிய டிடிஎச்- டைரக்ட் டூ அனுமன்ஜி என குறிப்பிட்டுள்ளார்கள்.
இருவர் வெற்றி
இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் கூறுகையில் இந்த படவரி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் குறித்து அறிவிக்கிறேன். இந்த விளையாட்டு பாஸ்ட்ஸ்ட் பிங்கர்ஸ் பர்ஸ்ட் போட்டியாக இல்லாவிட்டாலும் ஏராளமானோர் பதில் அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து இந்த இருவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.