டெல்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு- பாதுகாப்பு அதிகரிப்பு!
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் நிரம்பி காணப்படும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் பரபரப்புடன் காணப்படும்.
இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சோதனைகளை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
Delhi: Security tightened at Terminal 3 of Indira Gandhi International Airport after a suspicious bag was spotted in the Airport premises. pic.twitter.com/7CkuNqJbCs
— ANI (@ANI) November 1, 2019
மேலும் இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.