மிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்!
டெல்லி: மிசாவுக்கு மத்தியில் சுஷ்மா ஸ்வராஜுக்கும் ஸ்வராஜ் குஷாலுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் கரம் பிடித்தனர்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. இவருக்கு கணவர் ஸ்வராஜ் குஷால், மகள் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் உள்ளனர். பன்சூரியும் வழக்கறிஞர் ஆவார்.
சுஷ்மாவுக்கும் குஷாலுக்கும் நடந்தது காதல் திருமணம். கல்லூரி நாட்களில் இருவரும் பழகி திருமணம் செய்து கொண்டு 44 ஆண்டுகள் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வேண்டாம் என கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டார்.
அயோத்தி வழக்கு.. ஆவணங்கள் திருடு போய்விட்டது.. உச்ச நீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா பரபரப்பு பதில்
வழக்கறிஞர்
அதற்கு காரணம் அவர் உடல்நிலை பாதிப்பு என்றாலும் தனது கணவருடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் அவர் அரசியலில் இருந்து விலக விரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களது காதல் கதை குறித்து காண்போம். குஷாலும் சுஷ்மாவை போல் வழக்கறிஞர்.
வேறுபாடுகள்
இருவரும் டெல்லியில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். சுஷ்மா ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை பின்பற்றி வந்தார். ஆனால் குஷாலோ சோசியலிஷ அரசியலை முன்னெடுத்து வந்தனர். எனினும் காதலுக்கு இந்த வேறுபாடுகள் எல்லாம் கிடையாது என்பதால் இருவரும் காதலித்தனர்.
திருமணம்
இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றினர். இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி எமர்ஜென்சி காலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பேரதிர்ச்சி
மிசாவுக்கு மத்தியில் இருவருக்கும் முகிழ்த்த காதல் 44 ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் நேற்று சுஷ்மா மறைந்தார். இது அவரது கணவருக்கும் மகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.