பட்ஜெட் 2019:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பாஸ்போர்ட்டுடன் ஆதார்! பட்ஜெட்டில் அதிரடி!
Recommended Video
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019- 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே மின் விநியோகம், ஒரே பயணம் ஒரே கார்டு உள்ளிட்ட பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.