ஏபிபி சர்வே.. பாஜகவிற்கு அள்ளித்தரும் 3 மாநிலங்கள்.. குஜராத், மகாராஷ்டிரா, பீகாரில் தாமரை மலரும்!
லோக் சபா தேர்தலில் குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவே அதிக இடங்களை பெறும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லோக் சபா தேர்தலில் குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவே அதிக இடங்களை பெறும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது செய்தி நிறுவனமான ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் லோக் சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகார் நிலை
பீகாரில் காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 40ல் 5 இடங்கள் கிடைக்கும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகாரில் வெற்றி கிடைக்கும். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களை அள்ளும்.
எத்தனை இடங்கள்
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் 15 இடங்களைப் பெறும். ஐக்கிய ஜனதாதளம், எல்ஜேபி கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைக்கும். பீகாரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுக்கு 1 இடம் மட்டுமே கிடைக்கும். லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும்.
மகாராஷ்டிராவில் நிலை
அதேபோல் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெல்லும். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 48ல் 28 இடம் கிடைக்கும். 20 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கூட்டணி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் நிலை
குஜராத்தில் பாஜகவுக்கு 24 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 2 சீட் மட்டுமே கிடைக்கும். இந்த முறையும் குஜராத்தில் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடையும் என்று ஏபிபி சர்வேயில் கூறப்பட்டு இருக்கிறது.