கல்வி நிறுவனங்களில் இடதுசாரிகள் அராஜகத்தால் கற்கும் சூழல் பாதிப்பு-மோடிக்கு 208 கல்வியாளர்கள் கடிதம்
டெல்லி: கல்வி நிறுவனங்களில் இடதுசாரிகள் அராஜகங்களால் கற்கும் சூழ்நிலை பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு 208 கல்வியாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பல்வேறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் என 208 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஜாமியா மில்லா இஸ்லாமியா பல்கலைக் கழகங்களில் இடதுசாரிகளின் அராஜகங்கள் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக் கழகங்களில் விவாதங்களும் ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும். ஆனால் மாணவர்களை அரசியல் பாதைக்கு திசை திருப்புகின்றனர்.
ஏழை மாணவர்களை இடதுசாரி மாணவர் சங்கங்கள் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை இடதுசாரிகள் சீர்குலைக்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.