டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் என்னவாகப் போகிறது?... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெல்லியில் கையெழுத்தாகி உள்ளது.

டெல்லியில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் துறை அதிகாரிகள் - ஓ.என்.ஜி.சி இடையே இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல், மற்ற 2 ஒப்பந்தங்கள் ஐ ஓ சி நிறுவனத்துடன் கையெழுத்தானது.

Agreement to take hydrocarbons in 4 more places in Tamil Nadu

நாகை மாதானம், கடலூர் புவனகிரி, தஞ்சை பந்தநல்லூர், திருவாரூர் நன்னிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது. புவனகிரியிலும் நன்னிலத்திலும் 2 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற இரண்டு இடங்களில் 3 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக திறந்த வெளி அனுமதிக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஹைட்ரோ கார்பன் வளங்களை, ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இக்கொள்கையின் நோக்கமாகும்.

அதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் எண்ணெய் வளம் மிக்க 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றன. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.

இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 474 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.

மூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, பெட்ரோலிய துறை அனுமதி வழங்கி உள்ளது.

English summary
Petroleum Department and ONGC, an agreement To take Hydrocarbons for four more locations in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X