வேளாண் கடன்... தள்ளுபடி செய்ய... திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில் கோரிக்கை!!
டெல்லி: கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்பி ராஜ்ய சபாவில் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "தனிநபர்கள் மற்றும் உரிமையாளர்கள் என்று பாகுபாடு காட்டப்படுகிறது. இதன் மூலம் இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே என்பது உறுதியாகிறது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். எனவே பொது மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நான் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
ஓபிஎஸ் சொன்ன பார்முலா.. ஏற்க மறுத்த எடப்பாடி தரப்பு.. ஆடிப்போன அதிமுக தலைமையகம்.. இனிதான் ஆட்டமே!
வேளாண்மை, சில்லறை விற்பனை மற்றும் நிபந்தனை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு நான் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். சாமானியர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர்'' என்றார்.