குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ராஜ்யசபாவில் ஆதரவு- அதிமுக
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பதாக ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், விஜிலா சத்தியானந்த் தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் பேசிய எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், குடியுரிமை திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது. இம்மசோதாவில் ஈழத் தமிழரை சேர்க்காதது வருத்தம் தருகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வருகை தரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
இதேபோல் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த் பேசுகையில், ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இம்மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே லோக்சபாவில் குடியுரிமை மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்தரநாத் குமார் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
In Rajyasabha AIADMK MP SR Balasubramaniam has demanded that Centre Should give the Indian Citizenship Indian Citizenship for Eelam Tamils.