டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Aircel Maxis Case: P Chidambaram charged as an accused No. 1

இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதன் காரணமாக சில வாரம் முன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அது இல்லாமல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டிற்கு காரணகர்த்தா ப.சிதம்பரம்தான் என்று கூறி புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினகரனுக்கு இருக்கும் கடைசி அஸ்திரம் 'ஸ்லீப்பர் செல்'... கைகொடுப்பார்களா? தினகரனுக்கு இருக்கும் கடைசி அஸ்திரம் 'ஸ்லீப்பர் செல்'... கைகொடுப்பார்களா?

ப.சிதம்பரம், மட்டுமில்லாமல் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல், கார்த்தியின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமன், ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வி.ஸ்ரீனிவாசன், ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனம், மேக்சிஸ் மொபைல் சர்வீசஸ் ஆகியோர் பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

English summary
Aircel Maxis Case: P Chidambaram charged as an accused No. 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X