இன்று நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக திரளும் அமைப்புகள்.. பரபர பந்த்!
மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றும் நாளையும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றும் நாளையும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் நாளை மாலை வரை நடக்க உள்ளது. பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏன் போராட்டம்
போராட்டம் பல்வேறு காரணங்களை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழிற்சாலைகள் பாதித்தது. பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்கும் கொள்கைகளை மத்திய அரசு வகுக்காதது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது என்று 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து போராட்டம் நடக்கிறது.
எத்தனை பேர்
மொத்தம் 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. இந்தியா முழுக்க பல்வேறு அமைப்பு மற்றும் அமைப்பு சாரா பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அனைத்து மாநில ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
விவசாயிகள் சங்கம்
அதேபோல் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகள் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. கம்யூனிஸ்ட் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாளைய மாஸ்
இந்த போராட்டம் நாளை வரை நடக்கிறது. நாளை இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். நாளை போராட்டக்காரர்கள் டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகள் நிறுத்தம்
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தபட்டுள்ளது. பாஜக ஆளாத பல மாநிலங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை அடுத்து பல மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.