முழு அடைப்பு போராட்டம்.. இன்று நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி.. குலுங்க போகும் டெல்லி!
மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர் சங்கங்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர் சங்கங்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த பந்தின் ஒரு பகுதியாக இன்று பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. டெல்லியில் இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேரணி
இந்த போராட்டம் இன்று மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று போராட்டக்காரர்கள் டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மந்தி ஹவுசில் இருந்து பாராளுமன்றம் வரை போராட்டம் நடக்கிறது.
பெரிய திட்டம்
பல்லாயிரம் ஊழியர்கள் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளனர். சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இந்த பேரணியில் மட்டும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் நாடாளுமன்றம் முன்பு நின்று கோஷமிட்டு போராட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
யார் எல்லாம்
அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா பணியாளர் அமைப்புகள், கம்யூனிஸ்ட் அமைப்புகள் சார்பாக இந்த பேரணி நடக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த போராட்டம் காரணமாக டெல்லி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியே ஆயிரக்கணக்கான போலீசார் நிற்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று காலை 11 மணிக்கு இந்த பேரணி நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.