டெல்லி எய்ம்ஸ்...கொரோனா வார்டில் மீண்டும் அமித் ஷா...தீவிர சிகிச்சை!!
டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமைதான் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்திருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து 14 நாட்களுக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார்.
Recommended Video
இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு (நேற்று) மீண்டும் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனை மருத்துவர் குழு தற்போது தொடர்ந்து அமித் ஷாவின் உடலை பரிசோதித்தும், கண்காணித்தும் வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தலைமையில் மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
கொரோனா சிகிச்சைக்காக டெல்லி, குர்காவனில் இருக்கும் மேதாந்தா மருத்துவமனையில் இந்த மாத துவக்கத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கு நெகடிவ் என்று பரிசோதனையில் தெரிய வந்த பின்னர், வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தார். வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
மருத்துவமனை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த 3-4 நாட்களாக தலைச்சுற்றல், உடல் வலி இருந்ததாக தெரிவித்து இருந்தார். சமீபத்தில்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இருந்த இவர், நெகடிவ் என்ற ரிசல்ட் கிடைத்து இருந்தது. தற்போது கொரோனா வார்டில் சேர்க்கபட்டு இருக்கிறார். நலமாக இருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது பணிகளை கவனிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் சுவற்றில் கமலா ஹாரிஸ் பெயர்...சகோதரி மாயா மகள்...மீனா ஹாரிஸ் ஆச்சரியப் பதிவு!!